Saturday, October 17, 2009

வேட்டைக்காரன் பட தாமத விவரமும் தீபாவளி ஸ்பெஷல் கிசு கிசு கார்னர்-5ம்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் காமிக்ஸ் பிளாக் வரலாற்றில் முதன் முறையாக காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்ல வந்து இருக்கும் சூப்பர் ஹீரோக்களை ஒரு முறை பார்த்து விடுங்கள். பதிவை படித்து முடித்த பின்னர் உங்களுக்கு இதனை படிக்கும் மனநிலை இல்லாமல் இருக்கலாம்.


நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 , கிசு கிசு கார்னர்-2 , கிசு கிசு கார்னர்-3 மற்றும் கிசு கிசு கார்னர்-4 வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-5.

சமீபத்தில் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வரும் தென்னம்பாளயத்தார், இந்த தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாட இருப்பது தெரிந்த மருத்துவர் விஜய்'ன் தந்தையும் வருங்கால தமிழக கவர்னருமாகிய எஸ்.சந்திரசேகரா* (பின்னே, மருத்துவர் விஜய் வருங்கால முதல்வர் என்றால் அவரது தந்தை குறைந்த பட்சம் ஒரு தமிழக கவர்னர் ஆக கூட இருக்கக் கூடாதா என்ன? ) உடனடியாக தென்னம்பாளயத்தாரை தொடர்பு கொண்டு இந்த தீபாவளியை "இளைய தளபதி தீபாவளியாக" கொண்டாடும்படியாக கேட்டுக் கொண்டார்.

அதாவது, தல தீபாவளி என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை குறிக்கும். அதனால் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசும் தென்னம்பாளயத்தார் எங்கே தல தீபாவளி கொண்டாடி அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் புகழை பரப்பி விடுவாரோ என்று பயந்தே தல தீபாவளியாக கொண்டாடாமல் "இளைய தளபதி தீபாவளியாக" கொண்டாடும்படியாக கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஒபாமாவுக்கே உப்புமா கொடுக்க மறுத்த தென்னம்பாளயத்தார் மருத்துவர் சின்ன கொய்யா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெரிய கொய்யா பேச்சுக்கா செவி சாய்ப்பார்? அதனால் அவர் வழக்கத்தை மாற்றாமல் இந்த தீபாவளியை தல தீபாவளியாக மட்டுமே கொண்டாடுகிறார். இதனால் மனம் நொந்த மருத்துவர் சின்ன கொய்யா விஜய் தன்னுடைய படமாகிய வேட்டைக்காரனை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யாமல் தள்ளிப் போட்டு விட்டார். இதற்க்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் (குடும்ப உத்தரவு - ஆதவன் ரிலீஸ், பாடல் மறுபடியும் ஷூட்டிங்) உண்மையான காரணம் தென்னம்பாளயத்தார் தல தீபாவளி கொண்டாடுவதுதானாம்.

மருத்துவர் விஜய் ரசிகர்கள் மனம் மகிழ இதோ அசல் படத்தின் போட்டோவும், அசலான அசல் படத்தின் போட்டோவும். தல ரசிகர்கள் மன்னிக்கவும்.

tyikiyukiuuyiy

இப்படியாக என்பது வருட தமிழ் சினிமா வரலாற்றில் தனி ஒரு மனிதரின் தல தீபாவளி ஒரு படத்தின் ரிலீஸ்'ஐயே தள்ளிப் போட்ட சம்பவம் முதன் முறையாம். அதனால், தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக நடந்த இந்த சம்பவத்தை உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் தகவலாக அளிப்பதில் பூங்காவனத்துக்கு பெருமை.

*வருங்கால தமிழக கவர்னருமாகிய எஸ்.சந்திரசேகரா* என்று இருப்பதை வருங்கால தமிழக கவர்னருமாகிய வருங்கால மருத்துவர் எஸ்.சந்திரசேகரா என்று வாசிக்கவும். ஏனென்றால், மருத்துவர் விஜய் அரசியலில் குதித்த உடனே அவரின் தந்தைக்கும் ஏதாவது ஒரு தனியார் பல்கலைக் கழகம் மருத்துவர் பட்டத்தை கொடுத்து தொலைப்பார்கள். அதனால் அவரை வருங்கால தமிழக கவர்னருமாகிய வருங்கால மருத்துவர் எஸ்.சந்திரசேகரா என்று கூறுவதில் தவறேதும் இல்லை தானே?

Friday, October 2, 2009

கிசு கிசு கார்னர் 4 - காணாமல் போன காமிக்ஸ் பதிவர்கள்!

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 , கிசு கிசு கார்னர்-2 , கிசு கிசு கார்னர்-3 வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-4.

சமீப காலமாக காமிக்ஸ் வலைப் பதிவர்கள் சிலர் காணாமல் போய் விட்டது குறித்து தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்கள் மனவருத்தமடைந்துள்ளனர். இதோ அவர்களது வருத்தம் போக்கும் வாலிப விருந்தாக சில பல சுவையான கிசுகிசுக்கள்.
  1. தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் ஆகிய அந்த ரேலிஃபேன் பதிவர் இன்றோடு இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ வாழும் உலகிலிருந்து வெற்றிகரமாக பணிகளை முடித்து விட்டு தனது ஊரான இது எந்த ஊர்?” என்று கேட்க வைக்கும் ஊருக்கு திரும்புகிறார். அவரது பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
  2. தமிழ் காமிக்ஸ் வலையுலகின் “முடி”சூடா மன்னன் ஆக திகழும் அந்த பதிவர் சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் (பெங்களூரு, ஹைதராபாத் தொடங்கி இலண்டன், சிங்கப்பூர் வரை) காணப்பட்டதாக வதந்திகள் உலவினாலும் சமீபத்தில் தென் ஆப்பரிக்காவில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியொன்றில் (இந்தியா-பாகிஸ்தான்) தொலைகாட்சியில் சில வினாடிகள் தோன்றியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  3. அதே போல் அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியான ஒரு பயங்கரவாதி பதிவரும் சமீபத்தில் திருச்சியில் தென்பட்டதாகவும் பட்சி கூறுகிறது. “பயங்கரவாதி பதிவர் ஜலஜாவுடன் ஜல்சா! திருச்சியில் 'திரு திரு துறு துறு' தியேட்டரில் கிளு கிளு குளு குளு!” என்கிற ரீதியில் திருச்சி நாளேடுகளில் தலைப்புச் செய்திகள் வெளியாவதாகவும் தகவல்.
  4. போலீஸாரால் தீவிரமாகத் வேட்டையாடப்பட்டு வரும் அந்த காமிக்ஸ் டாக்டர் ஒருவேளை பிடிபட்டால் சிறையில் இருக்கும் போது “மோட்சத்திற்கு அப்பால்...மினி மோட்சம்” என்ற பெயரில் கிராபிக்ஸ் நாவல் ஒன்று எழுத திட்டமிட்டிருக்கிறாராம். இதற்கு அவருக்கு உந்துதலாக விளங்கியது இந்தப் பதிவுதானாம். அதைக் கூட தனது சொந்தப் பெயரில் எழுதாமல் தீவிரவாதி டாக்டர் செக்ஸ்...ச்சீ டாக்டர் சிக்ஸ் என்ற புனைப்பெயரில் தான் எழுதப் போகிறாராம். பதிப்பகத்தாருடன் பேச்சுவார்த்தைகள் இப்போதே தீவிரமாக நடைபெறுவதாக தகவல்.
  5. தென்னம்பாளையத்தார் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வீட்டிற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பூரிக்கட்டை வாங்கியுள்ளார். மரத்தால் செய்த பூரிக்கட்டைகள் சுலபத்தில் உடைந்து விடுவதாகத் த்கவல்.
  6. அதே போல் இன்று காந்தி ஜெயந்தி (காந்தி நம் தேசத்தந்தை, ஆனால் ஜெயந்தி ஒரு சூப்பர் ஃபிகர்). எனவே தென்னம்பாளையத்தார் உடன் உரையடுபவர்கள் கவனமாக பேச்சுவாக்கில் காந்தி பற்றிய மூச்சு கூட விடாமல் அவரிடம் பேசுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். சமூக நலன் கொண்டு இந்த கிசுகிசு வெளியிடப் படுகிறது.
இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

-- சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

Related Posts Widget for Blogs by LinkWithin