Saturday, October 17, 2009

வேட்டைக்காரன் பட தாமத விவரமும் தீபாவளி ஸ்பெஷல் கிசு கிசு கார்னர்-5ம்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் காமிக்ஸ் பிளாக் வரலாற்றில் முதன் முறையாக காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்ல வந்து இருக்கும் சூப்பர் ஹீரோக்களை ஒரு முறை பார்த்து விடுங்கள். பதிவை படித்து முடித்த பின்னர் உங்களுக்கு இதனை படிக்கும் மனநிலை இல்லாமல் இருக்கலாம்.


நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 , கிசு கிசு கார்னர்-2 , கிசு கிசு கார்னர்-3 மற்றும் கிசு கிசு கார்னர்-4 வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-5.

சமீபத்தில் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வரும் தென்னம்பாளயத்தார், இந்த தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாட இருப்பது தெரிந்த மருத்துவர் விஜய்'ன் தந்தையும் வருங்கால தமிழக கவர்னருமாகிய எஸ்.சந்திரசேகரா* (பின்னே, மருத்துவர் விஜய் வருங்கால முதல்வர் என்றால் அவரது தந்தை குறைந்த பட்சம் ஒரு தமிழக கவர்னர் ஆக கூட இருக்கக் கூடாதா என்ன? ) உடனடியாக தென்னம்பாளயத்தாரை தொடர்பு கொண்டு இந்த தீபாவளியை "இளைய தளபதி தீபாவளியாக" கொண்டாடும்படியாக கேட்டுக் கொண்டார்.

அதாவது, தல தீபாவளி என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை குறிக்கும். அதனால் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசும் தென்னம்பாளயத்தார் எங்கே தல தீபாவளி கொண்டாடி அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் புகழை பரப்பி விடுவாரோ என்று பயந்தே தல தீபாவளியாக கொண்டாடாமல் "இளைய தளபதி தீபாவளியாக" கொண்டாடும்படியாக கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஒபாமாவுக்கே உப்புமா கொடுக்க மறுத்த தென்னம்பாளயத்தார் மருத்துவர் சின்ன கொய்யா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெரிய கொய்யா பேச்சுக்கா செவி சாய்ப்பார்? அதனால் அவர் வழக்கத்தை மாற்றாமல் இந்த தீபாவளியை தல தீபாவளியாக மட்டுமே கொண்டாடுகிறார். இதனால் மனம் நொந்த மருத்துவர் சின்ன கொய்யா விஜய் தன்னுடைய படமாகிய வேட்டைக்காரனை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யாமல் தள்ளிப் போட்டு விட்டார். இதற்க்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் (குடும்ப உத்தரவு - ஆதவன் ரிலீஸ், பாடல் மறுபடியும் ஷூட்டிங்) உண்மையான காரணம் தென்னம்பாளயத்தார் தல தீபாவளி கொண்டாடுவதுதானாம்.

மருத்துவர் விஜய் ரசிகர்கள் மனம் மகிழ இதோ அசல் படத்தின் போட்டோவும், அசலான அசல் படத்தின் போட்டோவும். தல ரசிகர்கள் மன்னிக்கவும்.

tyikiyukiuuyiy

இப்படியாக என்பது வருட தமிழ் சினிமா வரலாற்றில் தனி ஒரு மனிதரின் தல தீபாவளி ஒரு படத்தின் ரிலீஸ்'ஐயே தள்ளிப் போட்ட சம்பவம் முதன் முறையாம். அதனால், தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக நடந்த இந்த சம்பவத்தை உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் தகவலாக அளிப்பதில் பூங்காவனத்துக்கு பெருமை.

*வருங்கால தமிழக கவர்னருமாகிய எஸ்.சந்திரசேகரா* என்று இருப்பதை வருங்கால தமிழக கவர்னருமாகிய வருங்கால மருத்துவர் எஸ்.சந்திரசேகரா என்று வாசிக்கவும். ஏனென்றால், மருத்துவர் விஜய் அரசியலில் குதித்த உடனே அவரின் தந்தைக்கும் ஏதாவது ஒரு தனியார் பல்கலைக் கழகம் மருத்துவர் பட்டத்தை கொடுத்து தொலைப்பார்கள். அதனால் அவரை வருங்கால தமிழக கவர்னருமாகிய வருங்கால மருத்துவர் எஸ்.சந்திரசேகரா என்று கூறுவதில் தவறேதும் இல்லை தானே?

Friday, October 2, 2009

கிசு கிசு கார்னர் 4 - காணாமல் போன காமிக்ஸ் பதிவர்கள்!

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 , கிசு கிசு கார்னர்-2 , கிசு கிசு கார்னர்-3 வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-4.

சமீப காலமாக காமிக்ஸ் வலைப் பதிவர்கள் சிலர் காணாமல் போய் விட்டது குறித்து தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்கள் மனவருத்தமடைந்துள்ளனர். இதோ அவர்களது வருத்தம் போக்கும் வாலிப விருந்தாக சில பல சுவையான கிசுகிசுக்கள்.
  1. தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் ஆகிய அந்த ரேலிஃபேன் பதிவர் இன்றோடு இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ வாழும் உலகிலிருந்து வெற்றிகரமாக பணிகளை முடித்து விட்டு தனது ஊரான இது எந்த ஊர்?” என்று கேட்க வைக்கும் ஊருக்கு திரும்புகிறார். அவரது பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
  2. தமிழ் காமிக்ஸ் வலையுலகின் “முடி”சூடா மன்னன் ஆக திகழும் அந்த பதிவர் சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் (பெங்களூரு, ஹைதராபாத் தொடங்கி இலண்டன், சிங்கப்பூர் வரை) காணப்பட்டதாக வதந்திகள் உலவினாலும் சமீபத்தில் தென் ஆப்பரிக்காவில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியொன்றில் (இந்தியா-பாகிஸ்தான்) தொலைகாட்சியில் சில வினாடிகள் தோன்றியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  3. அதே போல் அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியான ஒரு பயங்கரவாதி பதிவரும் சமீபத்தில் திருச்சியில் தென்பட்டதாகவும் பட்சி கூறுகிறது. “பயங்கரவாதி பதிவர் ஜலஜாவுடன் ஜல்சா! திருச்சியில் 'திரு திரு துறு துறு' தியேட்டரில் கிளு கிளு குளு குளு!” என்கிற ரீதியில் திருச்சி நாளேடுகளில் தலைப்புச் செய்திகள் வெளியாவதாகவும் தகவல்.
  4. போலீஸாரால் தீவிரமாகத் வேட்டையாடப்பட்டு வரும் அந்த காமிக்ஸ் டாக்டர் ஒருவேளை பிடிபட்டால் சிறையில் இருக்கும் போது “மோட்சத்திற்கு அப்பால்...மினி மோட்சம்” என்ற பெயரில் கிராபிக்ஸ் நாவல் ஒன்று எழுத திட்டமிட்டிருக்கிறாராம். இதற்கு அவருக்கு உந்துதலாக விளங்கியது இந்தப் பதிவுதானாம். அதைக் கூட தனது சொந்தப் பெயரில் எழுதாமல் தீவிரவாதி டாக்டர் செக்ஸ்...ச்சீ டாக்டர் சிக்ஸ் என்ற புனைப்பெயரில் தான் எழுதப் போகிறாராம். பதிப்பகத்தாருடன் பேச்சுவார்த்தைகள் இப்போதே தீவிரமாக நடைபெறுவதாக தகவல்.
  5. தென்னம்பாளையத்தார் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வீட்டிற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பூரிக்கட்டை வாங்கியுள்ளார். மரத்தால் செய்த பூரிக்கட்டைகள் சுலபத்தில் உடைந்து விடுவதாகத் த்கவல்.
  6. அதே போல் இன்று காந்தி ஜெயந்தி (காந்தி நம் தேசத்தந்தை, ஆனால் ஜெயந்தி ஒரு சூப்பர் ஃபிகர்). எனவே தென்னம்பாளையத்தார் உடன் உரையடுபவர்கள் கவனமாக பேச்சுவாக்கில் காந்தி பற்றிய மூச்சு கூட விடாமல் அவரிடம் பேசுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். சமூக நலன் கொண்டு இந்த கிசுகிசு வெளியிடப் படுகிறது.
இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

-- சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

Thursday, June 11, 2009

கிசு கிசு கார்னர் 3 - பிறந்த நாள் கொண்டாட்டங்களும் அதன் விளைவுகளும்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 & கிசு கிசு கார்னர்-2 வாசகர்களிடையே பெற்ற வரவேர்ப்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-3.

(1) கனவுகளை காண்பதையே முழு நேரத் தொழிலாக்கி கொண்ட அந்த "இளமை துள்ளும்" பதிவருக்கு (யூத்'ஆமாம்) கடந்த பத்து நாட்களாக ஒரு இனம் புரியாத பீலிங்க்ஸ்'ஆம். என்ன என்று விசாரித்தால் அவருடைய கணினி ஏதோ குளறுபடியால் பணி புரியவில்லையாம். அதனால் நண்பர்களின் வலைப்பூக்களில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தவித்தாலும், புத்தகங்களை படிப்பதற்கும், படங்களை பார்ப்பதற்கும் அவருக்கு நிறைய நேரம் கிடைத்ததால் அவர் ஒரு வகையில் சந்தோஷப்பட்டாராம்.


ஆனால், கொடுமையிலும் கொடுமை என்பதைப் போல அவர் ஒரு உலக மகா மொக்கை படத்தை பார்த்து விட்டு "விமோசனம்" தேடி அலைந்ததாக கேள்வி. அனேகமாக அந்த மொக்கை படம் ஒரு முழு நீளப்பதிவாக வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை.

டிஸ்கி: இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணி நாற்பத்தி ஐந்து மணியளவில் அவருடைய கணினி இணைப்பு சரியாகும் என்று நேமியாலஜி நிபுணர் வாஸ்த்து ரத்னா பாண்டி மடம் பங்கஜம் சாஸ்திரி அவர்கள் கூறி உள்ளார்.


(2) வழக்கமாக வேட்டையாடிக் கொண்டே விளையாடும் அந்த பதிவர், இன்னமும் சிக்கி - முக்கி காலத்திலேயே இருக்கிறார். அவரிடம் ஒரு மடிக் கணினி இருந்தாலும் கூட அவரால் கடந்த சில வாரங்களாக வலைப்பூக்களை மேய முடியவில்லையாம். அதாவது, அவரைப் பொறுத்த அளவில் பிரவுசிங் என்றால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தானாம். குரோம், நெருப்பு நரி பற்றி எல்லாம் அவர் கேள்விப் பட்டதே இல்லையாம். தற்கால உலகில் கற்கால மனிதர்?


இது கூட பரவாயில்லை. கடந்த ஞாயிறு அன்று ஒலக காமிக்ஸ் ரசிகர் இந்த வேட்டைக்காரர் வசிக்கும் அந்த குக்கிராமத்துக்கு சென்றாராம். அவரை சந்திக்கலாம் என்று அவருடைய கைபேசியில் அழைத்தால் அவர் பேப்பர் வாங்க பெங்களூரு சென்றுக் கொண்டு இருப்பதாக தகவல் அளித்தாராம். இதற்க்கு தான் நகரத்தில் வசிக்க வேண்டும்: ஒரு நாள் பேப்பர் வர வில்லை என்றாலும் கூட நாமே அருகிலுள்ள கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். இப்படி சீருந்து மூலம் பெங்களூரு செல்ல வேண்டியது இல்லை.What a Pity, What a Pity?


டிஸ்கி: சரி, இப்போது தான் நமக்கு நேரம் இருக்கிறதே என்று வேட்டையாடிக் கொண்டே விளையாடும் அந்த பதிவர் ஏதாவது தமிழ் படம் போகலாம் என்று தியேட்டருக்கு போனாராம். ஏற்கனவே இவர் "சத்திய' சோதனையில் சிக்கியவர் என்பது குறிப்பிட தக்கது. அப்படை இருந்தும், வலிய சென்று "ரோதனை"யோடு மீண்டு வந்த இவரை என்னவென்று சொல்வது?


(3) கடந்த ஒரு வாரமாக தமிழ் நாட்டில் எந்த ஒரு கடையிலும் தின்பண்டங்களும் "இதர" பொருட்களும் கிடைக்கவில்லையாம். உலகமெங்கும் பரவி உள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் அதற்க்கு காரணமாம். அந்த தலைவரின் தொண்டர்கள் ஆகிய குண்டர்கள் ஊரெங்கும் தோரணம் கட்டி, ஒரு "தோரணை" ஆக இந்த பிறந்த நாளை கொண்டாடினார்களாம்.


பணப் புழக்கம் அதிக அளவில் இருந்ததால் ரிசர்வ் வங்கி கூட த்டுமாறியதாம். உள்ளூர் செலவாணி அதிகரித்ததே இதற்க்கு காரணமாம். இந்த போராட்டங்களில் ஒரு துக்க சம்பவமும் நடை பெற்றது.தனமானச் சிங்கம், புரட்சிப் புயல், தானைத் தலைவி "சைதை தமிழரசி" தாக்கப்பட்டார். அதனால் சில பல சூறையாடல்களும், வங்கிக் கொள்ளைகளும் இனிதே நடை பெற்றது.


டிஸ்கி: இந்த கொண்டாட்டங்களை கண்ட இயக்க சகோதரர்கள் தலைவருக்கு வாராவாரம் பிறந்த நாள் வரக் கூடாதா என்று அங்கலாய்க்கிறார்களாம்,


(4) தன்னுடைய பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடிய அந்த பயங்கரவாதிப் பதிவர், இன்னமும் தன்னிலைக்கு வர வில்லையாம். அவருடைய கைபேசி கடந்த இரண்டு மூன்று நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப் பட்ட நிலையிலேயே உள்ளதாம். ஒரு வேலை, பிறந்த நாள் டிரீட் கேட்கும் ஒலக காமிக்ஸ் ரசிகரிடம் இருந்து தப்பிக்க அவர் செய்யும் உபாயமோ? ஏனென்றால் மற்றவர்கள் போன் செய்தால் இந்த பயங்கரவாதி பேசுகிறாராம். என்ன கொடுமை சார் இது?


டிஸ்கி: அந்த பயங்கரவாதி பதிவர் இன்றோ / நாளையோ ஒரு பதிவை இடப் போகிறார். யாரும் எதிர் பாராத ஒரு புதிய பதிவு அது.


(5) தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் தன்னுடைய ஐம்பதாவது பதிவை நாளை அன்று வலையேற்ற முடிவு செய்திருக்கிறாராம். இது அவருடைய ஸ்பெஷல் பதிவாம்.இந்த பதிவு முதல், அவருடைய வலைப் பூவில் பல மாற்றங்கள் செய்யவும் திட்டமிட்டு உள்ளாராம். ஏற்கனவே அவர் தன்னுடைய வலைப் பூவில் செய்த மாற்றங்களின் பிரதிபலிப்பை சில பல தளங்களில் காண முடிகிறது.


டிஸ்கி: வரலாறு காணாத ஒரு மாபெரும் காமிக்ஸ் வலைப் பதிவர் சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் நடை பெற உள்ளது. அனைத்து காமிக்ஸ் வலைப் பதிவர்களையும் ஒரு சேர ஒரே இடத்தில் கொணரும் முயற்சி இது. இதற்கான முயற்சியை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்களாம்.


(6) தமிழ் காமிக்ஸ் உலகின் சிறந்த விசிறி ஆகிய அந்த பெருந்தலைவர் திங்கட் கிழமை அன்றுதான் நீண்ட ஓய்வுக்கு பிறகு ஊர் திரும்பினாராம். அந்த விமானத்தின் மூலம் தான் சமீபத்தில் திருமணம் நிச்சயம் ஆன டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா'வும் பிரயாணித்தாராம். இப்போது சானியா டென்னிஸ் விளையாடுவதும் பெருந்தலைவர் வசிக்கும் ஊரில் தானாம்.


டிஸ்கி: நீண்ட நாள் கழித்து சானியா ஒரு டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் மூன்றாம் சுற்றுக்கு சென்று உள்ளார்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

-- சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

Sunday, May 17, 2009

கிசுகிசு கார்னர்-2

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு-1 வாசகர்களிடையே பெற்ற வரவேர்ப்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-2.

Note: The Image is to Make Sure that Readers Should Not Be Cruel To Animals. As Billions of Readers Watch this Photo and Hopefully PETA will take some action.

(1) கனவுகளுடன் முழுமையாக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் அப்பதிவரிற்கு பொல்லாத படை ஆசிரியரிடமிருந்து இருந்து இரண்டு அன்புக் கட்டளைகள் இடப்பட்டுள்ளது.
*ஒன்று பட்டப் பெயர்கள் அளிப்பதை தவிர்ப்பது,
*இரண்டு குஜிலிகளின் போட்டோக்களில் அடக்கி வாசிப்பது.

குஜிலிகளின் போட்டோக்களை பதிவில் போட்டு கனவுகளில் அவர்களுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவர் தற்போது குஜிலிகளிற்குப் பதில் சரோசா தேவி, சாவித்திரி என அவிழ்த்து விடலாமா என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் இந் நாயகிகளின் படங்கள் கதாசிரியரின் இளமைக் காலத்தை (?!?) அவரிற்கு நினைவூட்டி மகிழ்விக்கும் என அவர் நம்புகிறாராம்.

(2) தன்னுடைய அலுவல்களில் மூழ்கி விட்ட ஊர்ப்பெயரை கொண்ட அந்த பதிவர் அடுத்த ஏழு நாட்களில் இடப் போகும் பதிவு எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருக்கும் என்று கேள்விப்பட்ட பலர் கூறி வருகின்றனர். அய்யா, சென்னைக்கு சீக்கிரம் திரும்பி வாருமையா. உங்கள் பதிவுகளுக்கு காமிக்ஸ் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்

(3) பிரபல மருத்துவரும் தமிழ் வலைப்பதிவருமான அந்த அஜித் ரசிகர் தன்னுடைய வலைப்பூவில் புதிதாக ஆரம்பித்துள்ள வேட்டைக்கார தொடரில் இடம் பெறுவதற்காக இரண்டு காமிக்ஸ் பதிவர்கள் "ஸ்பெஷலாக கவனித்ததாக" பேச்சு. பெரிய பெட்டி கூட கை மாறியதாம். பெட்டி கை மாறியவுடன் அந்த பிரபல மருத்துவரும் உடனே தொடரை ஆரம்பித்து விட்டாராம். காமிக்ஸ் பாஷையில் சொல்வதானால் "பணப் பெட்டி மறைந்த மாயம்". தேர்தல் பாஷையில் சொல்வதானால் "கை மாறிய பெட்டி".

(4) ஒரு தொடரில் முயலாக வந்தவரும் லக்கி லூக்கின் தீவிர காதலால் தன்னுடைய பெயருக்கு முன்னாள் அடை மொழியாக அவர் பெயரை உபயோகப்படுத்துபவருமாகிய அந்த புதிய பதிவர் அடுத்து ஒரு வித்தியாசமான பதிவை இட என்ணி உள்ளாராம். தன்னுடைய மானசீக குருவாகிய அந்த தூங்குமூஞ்சி பதிவரை போலவே இந்த பதிவும் ஆளை அசத்துமாம்.

(5) மேலே குறிப்பிட்ட அந்த பதிவர் தற்போது டவுன்லோட் லிங்க்'குகளை கொடுக்காமல் காமிக்ஸ் பதிவுகளை வழங்குவதால் அவருடைய சிஷ்யப் பிள்ளையான மற்றுமொரு காமிக்ஸ் லவ்வர் (அவர் பெயர் கூட ஏதோ சுரேந்தர், நரேந்தர் மாதிரி இருக்கும்) அந்தப் பொறுப்பை சிரமேர்க்கொண்டு திடீர் திடீர் என்று டவுன்லோட் லிங்க்'குகளை வழங்கி காமிக்ஸ் ரசிகர்களை மயக்குகிறார். அதிரடி தொடருமாம். அதனால் காமிக்ஸ் ரசிகர்கள் தற்போது பதிவுகளுடன் கமெண்ட்'களையும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

(6) தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் தன்னுடைய ஐம்பதாவது பதிவை அடுத்த ஞாயிறு அன்று வலையேற்ற முடிவு செய்திருக்கிறாராம். இது அவருடைய ஸ்பெஷல் பதிவாம். அதற்காக தன்னுடைய வலைப்பூவில் சைட்பாரில் அப்டேட் வேறு செய்து வருகிறார்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

--
சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி

Saturday, March 28, 2009

கிசு கிசு கார்னர் 1

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசு கிசு கோபால் சமீப காலங்களில் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து இருக்கிறார். இனிமேல் கிசு கிசு கோபால் அவர்களின் காமிக்ஸ் வலையுலக கிசு கிசுக்கள் தொடர்ந்து வெளிவரும் என்று நம்பலாம்.

கிசு கிசு கார்னர் 1:

(1) ஊர் பெயரை இணையதள பெயராக கொண்ட அந்த வலைப்பூ சொந்தக்காராரின் கணினி மூன்று மாதங்களுக்கு பிறகு சரியாகி விட்டதாம். தீவிர போராளி ஆன அவர் B.S.N.L மற்றும் தன்னுடைய கணினி மேற்பார்வையாளர்களை விடாமல் முயற்சி செய்ததின் பலனே இது. இன்று (28-03-2009) ஊருக்கு செல்லும் அவர் திங்கள் கிழமை திரும்பி வந்து பல புதிய இடுகைகளை இட தயாராக உள்ளாராம். அதிலும் குறிப்பாக மினி லயன் சம்பந்தப் பட்ட ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று பல வலைப் பதிவர்கள் நம்புகிறார்கள். அடுத்த வாரம் அந்த பதிவு வரும் என்பது திண்ணம். விருந்துண்ண நீங்கள் தயாரா?

(2) முடி சூடிய அந்த மன்னரின் மடிக்கணினி "மறுபடியும்" பிரச்சினை செய்து உள்ளதாம். அதனால் மன்னர் கடுப்பில் இருப்பதாகவும், மீண்டு வந்த அவரால் சொன்ன படி பதிவிட இயலவில்லையே என்ற கோபமும் அவரை விரக்தியின் உச்சதிர்க்கே கொண்டு சென்று உள்ளதாம். கிட்ட தட்ட பதினைந்து பதிவுகளை ரெடி ஆக வைத்து உள்ளாராம் மன்னர். அனைத்தும் ஏப்ரல் மாதத்திலா? அல்லது வாரக் கடைசியில் வரும் என்று நம்பலாமா?

(3) காமிக்ஸ் வலைப் பூக்களுக்கு முன்னோடியாக திகழும் அந்த வலைப்பூவின் சொந்தக்காரர் மூன்று மாதங்களாக பதிவிடாமல் இருக்க காரணம் யாரோ ஒரு பயங்கரவாதி பதிவராம். அவர் எண் கூட ஆறுக்கும் எட்டுக்கும் நடுவில் இருக்குமாம். அவர் பல ஸ்கான்'களை பல மாதங்களாக தாமதப் படுத்தி வருகிறாராம். ஆனால் அந்த ஸ்கான்'கள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதால், மிக மிக விரைவில் அந்த பதிவு வரும் என்று நம்பலாம். இந்த தகவலை வலையுலகிற்கு கசிய வைத்தது அவரின் வேண்டப் பட்ட விரோதியாகிய இன்னொரு பதிவர்.

(4) வலைப்பதிவுகளில் பங்கு பங்கு என்று மார்கட் அப்டேட் செய்யும் அந்த பதிவர், உண்மையில் என்ன செய்கிறார் என்பதை உளவு பார்த்ததில் அவர் மார்க்கெட்டுக்கு சென்று "நின்னுக்கோரி வர்ணம், வரணும்" என்று பங்கு போடுவதை பார்த்து மயங்கி விட்டார்களாம் நமது உளவாளி ரிபோர்டர்கள்.

(5) ஒலகமே ஒரு மேடை, நாமெல்லாம் அதிலே காமிக்ஸ் ரசிகர்கள் என்று கூறும் ஒரு வலைப் பதிவர் மிக மிக விரைவில் (இன்னும் ஒரு வாரத்தில்) இடப்போகும் பதிவு தமிழ் காமிக்ஸ்'களில் நடக்கும் பித்தலாட்டங்களை துகிலுரித்து காட்டும் என்று கூறுகிறார். அப்படி என்ன பதிவோ?

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.

கிசு கிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

Saturday, March 21, 2009

என்னுடைய பிரம்மாக்கள்

 

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

என்னுடைய அறிமுகத்தை படித்து மகிழ்ந்த அனைவருக்கும் நன்றிகள். கும்மி அடித்த கூட்டம் இருக்கும் வரை இந்த பூங்காவனத்தின் பெயர் நிலைத்து இருக்கும் என்பதற்கு வேறு சாட்சிகளே தேவை இல்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரே ஒரு பதிவிற்கு இவ்வளவு கும்மிகள் வேறு எந்த காமிக்ஸ் பதிவிலும் வந்தது இல்லை.

அடுத்த மாதம் முதல் என்னுடைய இளம்பிராயத்து சாகசங்கள் (பூங்காவனத்தின் ஏங்கா மனம்? புஷ்பவதி பூங்காவனத்தின் புல்புல் இரவுகள்?) ஆரம்பம் ஆகின்றன. அதற்க்கு முன்னர் நீங்கள் என்னை உருவாகிய பிரம்மாக்களை தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனால்தான் இந்த அறிமுகப் பதிவு. முதலில் என்னை உருவாக்கியவர்களின் அறிமுகங்கள் (இவை அனைத்தும் பின்னுட்டங்களின் மூலமே எடுக்கப் பட்டவை ஆகும்).

முதலில் எங்களின் பிரம்மா ஆகிய திரு ஜோஸ் அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு,  அவரது பெயில்போர்ட் சைஸ் புகைப் படத்துடன் (பாஸ் போர்ட் சைஸ் புகைப் படம் தான், ஆனால் அவர் பாஸ் ஆகாததால் தான் அது பெயில்போர்ட் சைஸ் புகைப் படம் ஆகி விட்டது).

பதிவகம்: புலா சுலாகி

பதிவர்: தோழர் புலா சுலாகி

பதிவு: இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம் (ராணி காமிக்ஸ-பேய்க்காடு)

Chezhi said...
//கண்ணாடி ஏன் கிங் விஸ்வாவைக் காட்டவில்லை!!!// அப்ப நம்ம ஜோஸ் எல்லாரும் என்ன தலைமறைவாக இருந்தார்களா என்ன?

February 27, 2009 12:14 AM

josh

shankarvisvalingam said...
 
நண்பர் செழி,
 
சிவப்பு காஸ்ட்யூம் 
கெட்டப்பில்,தாடி,ஸ்பெஸல் எஃபெக்ட் ஹெர்  
கட்டிங், ஒரு பல் மிஸ்ஸிங்கில் இருப்பது
எனதருமை நண்பர் ஜோஷ் இல்லையா,
 
ஐயகோ தசாவதாரம் தோற்றது போங்கள்.
 
February 27, 2009 2:01 AM

 

திரு ஜோஸ் அவர்களின் இன்னும் சில அரிய படங்கள் உங்களின் மேம்பட்ட பார்வைக்கு:

ஜோஸ்’ம் அவருடைய அல்லக்கையும் மாயாவி'யிடம் அடி வாங்கும் ஜோஸ்
Josh & His Allak Kai    Josh Getting Beaten By Phantom

அடுத்தபடியாக என்னுடைய இன்னொரு பிரம்மா ஆன திரு வயகரா தாத்தா அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

vayagara Thaathaa 0

இவர் தான் வயகரா தாத்தா. இவரின் வயது என்ன என்பதை தெரிந்து கொள்ள பலர் ஆசைப் படுவார்கள். பெண்களிடம் வெய்தும், ஆண்களிடம் சம்பளமும் கேட்கக் கூடாது. அதைப் போலவே வயகரா தாத்தா அவர்களிடம் அவரின் வயதும், ஸ்கோர் என்ன என்பதையும் கேட்கக் கூடாது. அவர் ஒரு "பல களம் கண்ட வீரர்" என்பதால் அவரிடம் ஸ்கோர் கேட்க வேண்டாம் என்று கூறுகிறேன். மேலும் அவருக்கு பத்தாயிரத்துக்கு மேல் எண்ணவும் தெரியாது என்பதும் ஒரு காரணம் ஆகும்.  

 

அவரை பற்றி நான் எதுவும் கூறுவதை விட அவரே, அவரைப் பற்றி லக்கிலூக்கிடம் கூறுவதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.  

vayagara Thaathaa Final

லெட் த கும்மி ஸ்டார்ட்.

--
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

Sunday, February 15, 2009

என் அறிமுகம் - பூங்காவனம்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேதை, பெதும்பை & பேரிளம்பெண் என்று பெண்களுக்கு ஏழு வகையான பருவங்கள் இருந்தாலும் என்னுடைய வாழ்வில் நான் என்றுமே பேதை என்ற ஒரு வகையாகவே இருக்கிறேன். அது ஏன் என்பதை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

பரம ரகசியமாக இருந்த எங்களை பற்றி முதன்முதலில் எழுதியவர் திரு ஜோஸ் ஆவார். எது, எங்கே, எப்படி போன்ற கேள்விகளுக்கு கிழே விடை உள்ளது.

பதிவகம்: தலை சிறந்த காமிக்ஸ்

பதிவர்: ஒலக காமிக்ஸ் ரசிகர்

பதிவு: மாயாவியும் மந்திரவாதியும் & காப்பி அடிக்கும் காமிக்ஸ்'ம்

Josh Alexander சொன்னது…
நண்பரே,உங்கள் இடுகைகளை படிக்கும்போது இந்த வெள்ளைக்கார சமுதாயம் நம்மை எவ்வாறெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருந்தது என நினைத்து உள்ளம் கொதிக்கிறேன்.

நான்கூட இதற்கு முன் மங்கி காமிக்ஸ் என்று ஒன்று படித்துள்ளேன். அதில் வரும் கதாநாயகன் ஊத்துக்குளி காத்தவராயன் ஒரு பெரும் தொழிலதிபர். அவருக்கு துணையாக அவரின் செகரட்டரி பூங்காவனம் அம்மாள். உலக அளவில் புண்ணாக்கு வியாபாரத்தில் பெரிய புள்ளி.ஆனால் அவரின் மறுபக்கம் பயங்கரமானது.

அவர் இந்திய உளவு துறையில் ஏஜென்ட் காத்தவ் என்ற பெயரில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அவரின் சாகசங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.

எனக்கு பிடித்தது தலைப்பு நினைவில்லை. ஒரு ஐரோப்பிய தலைநகரில் ஒரு லாட்ஜில் தங்கியிருப்பார். போலீஸ் ரெய்ட் என கேள்விப்பட்டதும் அப்படியே தப்பித்து இந்த சதிக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பார்.இது போன்ற அருமையான சாகசங்களை ஐரோப்பியர்கள் கண்டிருக்க மாட்டார்கள்.

கண்டிருந்தால் அதையும் அவர்கள் சுட்டு இருப்பார்கள். இல்லை, சுட்டு விட்டார்களா?இது குறித்து இந்திய பழமை காமிக்ஸ் களை களஞ்சியமான உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
December 29, 2008 10:34 PM

இவ்வாறாக ஒரு கமெண்ட் போட்டு அமைதியாக இருந்த எங்கள் வாழ்வில் புயல் வீச செய்து விட்டார் அந்த புண்ணியவான். இந்த கமெண்ட்'ஐ கண்ட என் காத்தவ் உடனே ஒரு பதில் அளித்தார். அது பின்வருமாறு:

ஏஜென்ட் காத்தவ் சொன்னது…
யாருப்பா அது? எனக்கும் திருமதி பூங்காவனம் அவர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி பேசுவது? உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெவஸ்தை கிடையாத? போ, போய் வேலையை பாருங்கள் சார்.
December 30, 2008 12:23 AM

ஆனால் அப்போதும் சில பல பாவிகள் வேறு வேறு வலைத்தளங்களில் வந்து எங்களை கிண்டல் செய்ததால் "உலக வலை தளங்களில் முதன்முறையாக" நானே வந்த பதில் அளிக்க வேண்டியததாகிவிட்டது. அந்த வேண்டுகோள் இதோ:


திருமதி பூங்காவனம் சொன்னது…
பஞ்சமா பாவிகளா,என்னுடைய பெயரை என் இன்னும் கெடுக்கிறீர்கள்?ஒழிந்து போங்கள்.
December 30, 2008 7:58 PM

ஆனாலும் சில பல படுபாவிகள் என்னை பற்றி இன்னும் தவறாக எழுதி வருகின்றனர்.

ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம் இது என்பதை இவர்களை போன்ற பலரும் நிரூபித்து வருகின்றனர். காதலர் தினமான நேற்றும் கூட எங்களை இந்த பாவிகள் நிம்மதியாக இருக்க விட வில்லை.
என்ன செய்யலாம்?
Related Posts Widget for Blogs by LinkWithin